சத்திய ஞானசபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் - நாளை நடக்கிறது ஜோதி தரிசனம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 149வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் நடைப்பெற உள்ளது. தொடர்ந்து காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளத்துடன், மது மற்றும் மாமிச கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Next Story