6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை : குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை தினமான நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில், அங்குள்ள தோட்டத்தில் காயமடைந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமி மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்