குரூப் 4 தேர்வு முறைகேடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடும் சிபிசிஐடி

குருப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப் 4 தேர்வு முறைகேடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடும் சிபிசிஐடி
x
குருப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தாண்டி என்ற காவலரின் மனைவி மற்றும் 2 சகோதரர்கள் குருப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளது குறித்து புகார் எழுந்ததால், பெரிய கண்ணனூரில் உள்ள அவர்களின் வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் சிவகங்கையில் உள்ள சித்தாண்டியின் வீட்டிற்கு சென்றனர். அதுவும் பூட்டி கிடந்ததால் 4 பேரை பற்றி விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, காரைக்குடியில் பத்திரப்பதிவு துறையில் பணிபுரியும் வேல்முருகன் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்