"தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக கூறினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்