"டிச.27ல் தான் சனிப்பெயர்ச்சி - ஜன.24ல் அல்ல" - திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு

வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
டிச.27ல் தான் சனிப்பெயர்ச்சி - ஜன.24ல் அல்ல - திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு
x
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா என்பது வெகுவிமரிசையாக நடைபெறும். அப்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து,  நளன் குளத்தில் நீராடி, சனிபகவானை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு நிகழவுள்ள  சனிப்பெயர்ச்சி தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் டிசம்பர் 27ஆம் தேதி தான், சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே,  வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்