குரூப்4 தேர்வு முறைகேடு : முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை நீக்கம் செய்ய திட்டம்

குரூப்4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறிவுத்திறன் சோதனையில் புகாரில் தொடர்புடையவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் முறைகேடு நடந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து விசாரணைக்கு உட்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்