விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - சென்னை புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை புறநகர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், உடனடியாக சரி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.
x
பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊர் சென்றவர்கள், சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனால், சென்னை புறநகரான வண்டலூர், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம் சுங்க சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்கு பணியில் இருந்து போக்குவரத்து காவலர்கள், சுங்க சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலையில் இருந்தே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கனரக வாகனங்கள் அனைத்தும், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்