மதுவில் ஆசிட் கலந்து அதிமுகவினர் இருவர் கொலை : குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி
மதுவில் ஆசிட் கலந்து கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
மதுவில் ஆசிட் கலந்து கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி, தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பரமத்திவேலூர் அடுத்த இருக்கூர் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நிலவிய போட்டியில், மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து அதிமுக பிரமுகர் செந்தில்குமார், தியாகராஜன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். அந்தக் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறிய அமைச்சர் தங்கமணி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தார்.
Next Story