போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
x
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள்  மற்றும் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து ,  ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்