எரிந்து சாம்பலான குடிசையில், எஞ்சியதை தேடும் மூதாட்டி...

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள தீர்த்தகாட்டில் 75 வயது மூதாட்டி பாண்டியம்மாள் குடிசை ஒன்றில் வசித்து வந்த நிலையில், அது நேற்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
x
மதுரை  மாவட்டம் வண்டியூர் பகுதியில் உள்ள தீர்த்தகாட்டில்  75 வயது மூதாட்டி பாண்டியம்மாள் குடிசை ஒன்றில் வசித்து வந்த நிலையில், அது நேற்று  தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இற​ந்து போன நிலையில், பிள்ளை இல்லாத பாண்டியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முதியோர் உதவித் தொகையில் வாழ்ந்து வரும் பாண்டியம்மாள் வைத்திருந்த ஆயிரத்து 50 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில், மாற்றுத் துணிக் கூட இல்லாத நிலையில், தீயில் எரியாமல் போன ஒன்றிரண்டு பொருட்களை ஒரு பையில் எடுத்துச் சென்றது காண்போ​ரை கண்கலங்க செய்ததாக கூறப்படுகிறது. பாண்டியம்மாளுக்கு தேவையானவற்றை அரசு  செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்