துக்ளக்' 50வது ஆண்டு விழா: வெங்கய்யா நாயுடு வெளியிட்ட விழா மலர் முதல் பிரதியை பெற்றார் ரஜினிகாந்த்
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி
தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயற்சிகளை மேற்கொள்கிறார் என்று குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
காலம், அரசியல், சமுதாயம் கெட்டு போய் கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story