"உண்மையை மறைத்து மக்களை திசை திருப்ப தமிழக முதலமைச்சர் முயற்சி" - திமுக தலைவர் ஸ்டாலின்

தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைத்து மக்களை முதலமைச்சர் பழனிசாமி திசை திருப்ப பார்ப்பதாக அவர் கூறி உள்ளார்.
உண்மையை மறைத்து மக்களை திசை திருப்ப தமிழக முதலமைச்சர்  முயற்சி - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைத்து மக்களை முதலமைச்சர் பழனிசாமி திசை திருப்ப பார்ப்பதாக அவர் கூறி உள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தி, சட்டப்பேரவையிலும் அழுத்தம் கொடுத்த பின்னரும், அ.தி.மு.க. அரசு "தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என பிடிவாதம் பிடித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு அதிமுக அரசு வழி விடுவது கண்டனத்திற்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்