புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் பேரணி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்