"94.71% பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

94 புள்ளி 71 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
94.71% பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
x
தமிழகத்தில் மொத்தம் 2 கோடி 30 ஆயிரத்து 431 அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு, தற்போது வரை 1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 686 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு விநியோகப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு, இன்று மாலைக்குள் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளாத அட்டைத்தாரர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக, அவரவர் நியாய விலை கடைகளில் வந்து பெற்று கொள்ளுமாறு, தகவல் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர், கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்