வாக்காளர்களுக்கு சேலையில் ரூ.100 வைத்து விநியோகம் : பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு சேலையில் 100 ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது.
வாக்காளர்களுக்கு சேலையில் ரூ.100 வைத்து விநியோகம் : பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
x
திருச்செங்கோடு கொசவம்பாளையம் பகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு  சேலையில் 100 ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது. கொசவம்பாளையம் பகுதியில் காரில் வந்த  சிலர் சேலையில் 100 ரூபாய் வைத்து வாக்காளர்கள் வீடுகளில் வீசி சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் மர்ம நபர்களை பிடிக்க சென்றபோது 5 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்ற 200க்கும் மேற்பட்ட சேலைகள் மற்றும் ஒரு சேலைக்குள் தலா 100 ரூபாய் பணம் என ஆயிரக்கணக்கான ரூபாய்களுடன் இருந்த காரை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்