ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு : 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்ததாக கூறி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்ததாக கூறி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி சிலையை அவமரியாதை செய்த மர்ம நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கோமிராக்களை ஆராய்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story