புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை திருவொற்றியூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி தர மறுத்ததால் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு தின  கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
சென்னை திருவொற்றியூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  அனுமதி தர மறுத்ததால் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திரா நகர் பகுதியை  சேர்ந்த  பொதுமக்கள் புத்தாண்டு தின விழாவிற்கு அனுமதி கோரி திருவொற்றியூர் உதவி ஆணையர் அனந்தகுமாரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மாநகர காவல் ஆணையரின் உத்தரவை சுட்டிக்காட்டி அவர் அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  50-க்கும் மேற்பட்டோர் திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து துணை ஆணையரிடம் மனு அளிக்க போலீசார் அறிவுத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்