எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
x
சென்னை மெரினாகடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அங்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அ.தி.மு.கவினர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசிக்க, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்