"திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பி விட்டார் கமல்" - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக விரித்த வலையில் சிக்காமல் தப்பிவிட்டதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மதுரை திருமங்கலத்தில் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வாக்குசேகரித்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் மக்களின்  அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்