"மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்" - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே, பரிசல் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே, பரிசல் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காவரி ஆற்றில், தடுப்பணை மூலமாக தண்ணீர் தேக்கப்படுவதை பயன்படுத்தி, கொள்ளையர்கள்,  பகலில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நடு ஆற்றில் அள்ளப்படும் மணலை, மறுகரையில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ள கடந்த 2-ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்