"4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும்" : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 சமுதாய மக்களை பழங்குடியினராக அறிவிக்கவேண்டும் : மத்திய அரசுக்கு, அதிமுக எம்பி கோரிக்கை
x
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 4 சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், கட்டுநாயக்கன், மலக்குறவன், எதுக்குலா, குறும்பன் உள்ளிட்ட நான்கு சமூக மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் பழங்குடிகளுக்கான சலுகைகளை பெற முடியவில்லை.  2016 ஆம் ஆண்டு இருளர் சமுதாயத்தை  பழங்குடி பட்டியலில் மத்திய அரசு சேர்த்த நிலையில்,  மீதமுள்ள  நான்கு சமுதாயத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோகுலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்