மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு
போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அதில், இருவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ரஹத்கான், கமால்கான் என்பது தெரியவந்தது. மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்ததும், பிறகு அந்த மாநில முகவரியில் இந்தியராக மாறி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் எடுத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
Next Story