கொடைக்கானலில் ஆறு மாணவ, மாணவிகளுக்காக இயங்குகிறது அரசுப் பள்ளி

கொடைக்கானலில் 6 மாணவ மாணவிகளுக்காக அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
கொடைக்கானலில் ஆறு மாணவ, மாணவிகளுக்காக இயங்குகிறது அரசுப் பள்ளி
x
கொடைக்கானல் நகரில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மொத்தம் 6 மாணவ மாணவியர் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். மேலும் பள்ளியில் சமையலர் ஒருவரும் பணிபுரிந்து வருகிறார். மாணவ, மாணவிகள் அதிக நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 6 மாணவர்களுக்காக 2 ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை 20 மாணவ, மாணவிகள் வரை படித்து வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இங்குள்ள மாணவர்களை பக்கத்தில் உள்ள பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்