"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், 4 பேர் கடந்த 10 தினங்களில் உயிரிழந்தனர். இது தொடர்பாக டி.டி.நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன் வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மனநல காப்பக இயக்குநர், தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. மேலும், மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுத்த நடவடிக்கை,  காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் உள்ளனவா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்