தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை : ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி மாநில கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
Next Story