வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் : பதற்றமான அண்ணா அறிவாலயம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால், அங்கு சிறிய சலசலப்பு ஏற்பட்டது. தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story