உதயமானது திருப்பத்தூர் மாவட்டம்...

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
x
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் இன்று புதிய மாவட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றனர். அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபஸ்கர், ஜெயகுமார், சி.வி. சண்முகம், ஓ. எஸ். மணியன், துரைக்கண்ணு, நிலோபர் கபில், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, கே.சி. வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர் மாவட்டத்தை துவ​ங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்