ஜோலார்பேட்டை - காண்டிராக்ட் மேற்பார்வையாளர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் புதைக்கும் காண்ட்ராக்டர் கிரி என்பவரிடம், கண்காணிப்பாளராக சென்னையை சேர்ந்த 55 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
ஜோலார்பேட்டை - காண்டிராக்ட் மேற்பார்வையாளர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ரயில்வே சிக்னல் வயர் புதைக்கும் காண்ட்ராக்டர்  கிரி என்பவரிடம், கண்காணிப்பாளராக சென்னையை சேர்ந்த 55 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கோடியூர்  பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது,  அவரை மர்ம நபர்கள்   ஓட ஓட விரட்டி  கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். தகவலறிந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்