11 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை

ஒசூரில், பதினொரு வயது பள்ளி மாணவிக்கு அறுபது வயது பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு : 60 வயது பள்ளி தாளாளரிடம் போலீசார் விசாரணை
x
ஒசூர் இராயக்கோட்டை சாலையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தாளாளராக 60 வயதான குருதத்தா என்பவர் உள்ளார். இந்நிலையில், கையெழுத்து பயிற்சி வகுப்பிற்காக ஒசூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது மாணவியை வகுப்பறையில் விட்டுவிட்டு தந்தை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தகம் எடுத்து தருவதாக கூறி அந்த மாணவியிடம் குருதத்தா சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து தனது தந்தையிடம் மாணவி கூறியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அவர், தாளாளர் குருதத்தாவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது மாணவியின் தந்தையிடம் தன்னை மன்னித்து விடுமாறு தாளாளர் கூறியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார், பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்