தென்காசி மாவட்டம் உதயம்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது.
x
தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. இதையடுத்து, மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் காலை 9.15 மணிக்கு துவங்கியது. மாவட்டத்தை தொடங்கி வைத்து, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டக்ஙளில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்