ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
x
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். உயர்க்கல்வித்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் 82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை பிர்லா கோளரங்கத்தில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கோளரங்க கருவி மற்றும் கோளத்தில் அறிவியல் கருவி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறையில் பணியாற்றி  பணி காலத்தில் இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில்  41 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். அமைச்சர்கள் அன்பழகன், காமராஜ், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்