"கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை" - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்

கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் தற்போது இல்லை என மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்துள்ளார்.
கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை - மத்திய கலாச்சார துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தகவல்
x
கீழடியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கிறதா என்றும், அங்கு சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுமா? எனவும் மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அருங்காட்சியகம் குறித்த கேள்விக்கு கீழடி அருகில் மாநில அரசு அருங்காட்சியகம் ஒன்று அமைத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்