சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாத முதல்நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.
சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்
x
சென்னை

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள், சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதை ஒட்டி, கோயிலில் ஆராதனைகள் நடத்தப்பட்டது.

குற்றாலம்

கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி என்பதால், அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் அருவியில் நீராடி, மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 

திருச்சி

திருச்சியில், மலைக்கோட்டை, கண்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் ஆகிய இடங்களில், அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். 

ராமேஸ்வரம் 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய ஏராளமான பக்தர்கள், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து, ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டனர். முன்னதாக கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் குளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்