நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி: அதிமுக அமைச்சர் - திமுக எம்.எல்.ஏ. மோதலும்.. விளக்கமும்...

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏவுக்கும் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
x
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் கே. சி. வீரமணி பங்கேற்றார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய  அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார், அரசு விழாக்களில் தன்னை புறக்கணிப்பதாகவும், பொதுமக்கள் குறைகளை தீர்க்க மனு அளிக்கும் போது, தனது மனுவை நிராகரிப்பதாகவும் அமைச்சர் மீது குற்றம்சாட்டினார். அப்போது அமைச்சர் வீரமணி, திமுக எம்எல்ஏ நந்தகுமார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் நீடித்த வாக்குவாதம் திடீரென இரு கட்சிகளுக்கும் இடையே கைகலப்பாக மாறியது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்