வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கொள்ளை : தாய் - மகனை கைது செய்து போலீசார் விசாரணை

வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து வந்த தாய், மற்றும் மகன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கொள்ளை : தாய் - மகனை கைது செய்து போலீசார் விசாரணை
x
சென்னை வளசரவாக்கம் உதவி காவல் ஆணையர் மகிமை வீரன் தலைமையிலான தனிப்படையினர் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பல்வேறு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வயதான பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் சென்று வருவது பதிவாகியிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது அந்த இரண்டு பேரும் வேலை கேட்டு வந்ததாகவும், தொலைபேசி எண் கொடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. உடனே, அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது, காரைக்குடி பொட்டலைச் சேர்ந்த சாந்தி மற்றும் அவரது மகன் நாகராஜ் என தெரியவந்தது. எனினும் சந்தேகம் தீராமல், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது, வேலை கேட்பது போல் சென்று, விசாரித்து விட்டு, ஆளில்லாத சமயத்தில் அங்கு சென்று திருடுவது அவர்களது வாடிக்கை என தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை கைது செய்ததோடு, எங்கெங்கு அவர்கள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 



Next Story

மேலும் செய்திகள்