முதலமைச்சருடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு: 'கோன்' நிறுவனத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை

பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ (Pekka Haavisto) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
முதலமைச்சருடன் பின்லாந்து அமைச்சர் சந்திப்பு: கோன் நிறுவனத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை
x
பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்தோ (Pekka Haavisto) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு நட்புறவு குறித்து பேச உள்ளார். முன்னதாக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த அவர்,  கோன் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்குவது குறித்து ஆலோசித்தார். இந்த நிறுவனம் தானியங்கி படிக்கட்டுகள்,தானியங்கி கதவுகள் , மின் தூக்கிகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்