7-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - போலீஸுடன் மருத்துவர்கள் வாக்குவாதம்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 7-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், 35 மருத்துவர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - போலீஸுடன் மருத்துவர்கள் வாக்குவாதம்
x
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், 7-வது நாளாக  மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதையடுத்து, அரசு மருத்துவமனை நுழைவுவாயிலி​ல் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்