வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
x
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடரை சமாளிக்க, 5 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், மழை குறித்த புகாரை பொதுமக்கள்1913 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர ஆணையர் ஏகே விஸ்வநாதன், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க அதிகாரிகளுக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்