நகை கடை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : முருகன் வாக்கு மூலத்தால் அதிர்ந்து போன போலீசார்

வழக்குக​ளில் கைதாவதில் இருந்து தப்பிக்க எஸ்.பி. ஒருவருக்கு 18 லட்சம் ரூபாயில் சொகுசு கார் மற்றும் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கைதான கொள்ளையன் முருகன் தெரிவித்த தகவலால் தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நகை கடை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் : முருகன் வாக்கு மூலத்தால் அதிர்ந்து போன போலீசார்
x
வழக்குக​ளில் கைதாவதில் இருந்து தப்பிக்க எஸ்.பி. ஒருவருக்கு 18 லட்சம்  ரூபாயில் சொகுசு கார் மற்றும் சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கைதான கொள்ளையன் முருகன் தெரிவித்த தகவலால் தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி தனியார் நகைக் கடையில் கடந்த 2 ஆம் தேதி 30 கிலோ எடைக் கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போனது. இதனை வடமாநில கொள்ளையர்கள் செய்திருக்கலாம் என முதலில் கணிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் அருகே நடந்த வாகன சோதனையில், கொள்ளையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை படை போலீசார் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. திருச்சி பஞ்சாப் நேஷனர் வங்கியில் நடந்த கொள்ளை உள்பட பல கொள்ளை சம்பவங்களில் இவர்களின் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தில் தெலுங்கில் திரைப்படம் தயாரித்ததுடன், இவர்களது சொந்த தயாரிப்பில் நடிக்கவும் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர தாங்கள் நகை கடை நடத்தி  வருவதாக கூறி சில தமிழ் நடிகைகளுடன் தொடர்பை ஏற்படுத்தியதுடன், சிலருக்கு ஏராளமான பணம் மற்றும் நகைகளை வழங்கியதாக  தெரிவித்துள்ளான் முருகன். கொள்ளை வழக்குகளில் கைதாகாமல் தவிர்க்க காவலர் முதல் எஸ்.பி. அந்தஸ்த்திலான அதிகாரிகள் வரை பணத்தை வாரி இறைத்த தகவல் தனிப்படை போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு 19 லட்சம் ரூபாயும், திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி.யாக பணியாற்றிய ஒருவருக்கு 18 லட்சம் மதிப்பில் சொகுசு கார் ஒன்றையும், முருகன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் சிலருடன் கூட்டணி போட்டு கொள்ளையர்கள் உலா வரும் செய்தி தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்