வருசநாடு வனப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்
தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 60 புள்ளி ஆறு பூஜ்ஜியம் அடியாக இருக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story