நகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு

கொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
நகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு
x
திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த  2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி  திருச்சியில் நடைபெற்ற  நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் கனகவள்ளி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் சரண் அடைந்த முருகன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு  போலீசார் காவிரி கரையில் புதைக்கப்பட்டிருந்த நான்கு கோடியே 30 லட்சம் மதிப்புடைய 12 கிலோ நகைகளை  மீட்டனர் . அந்த நகைகளை முதலில் பெங்களூரு நீதிமன்றத்திலும் பின்னர்  திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் மதுரை சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன்,கணேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  



Next Story

மேலும் செய்திகள்