மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட வினோத ஜந்துக்கள்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட விஷ பாம்புகள், காட்டு பல்லிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட விஷ பாம்புகள், காட்டு பல்லிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த முகமது பர்வேஸ், முகமது அக்பர் ஆகியோரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிறிய பெட்டிகளில் பாம்பு மற்றும் பல்லிகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, வண்டலூர் பூங்காவில் உள்ள மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பச்சை மர மலைபாம்பு, விஷபாம்பு, காட்டில் வாழும் மரகத மரப் பல்லி, கருப்பு மர பல்லி என 13 பாம்புகள் மற்றும் பல்லிகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.
Next Story