நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 24 வேட்பு மனுக்கள் ஏற்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் 24 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 24 வேட்பு மனுக்கள் ஏற்பு
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில்  24 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது. 46 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்ட்டிருந்த நிலையில், அதில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதிமுக,காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி கட்சி வேட்பாளர்கள் உட்பட சேர்ந்த 24 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மறுநாள் 3 ம் தேதி மாலை வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறலாம். 


Next Story

மேலும் செய்திகள்