நீட் ஆள்மாறாட்டம் - குடும்பத்துடன் உதித் சூர்யா கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரிடம் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக  தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா, குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை சிபிசிஐடி போலீசார்  சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், உதித் சூர்யாவின் த‌ந்தைக்கு ஆள்மாறாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்டமாக, உதித்சூர்யா குடும்பத்தினர் தேனிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு நடைபெறும் விசாரணைக்கு பிறகு, இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளதா உள்ளிட்ட விவரங்களை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்