பேனர் வைப்பதில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உறுதி

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பேனர் வைப்பதில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உறுதி
x
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சாஹு தேர்தலுக்காக ஒட்டப்பட்ட 215 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே  உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள  உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றுவர்கள் என்றும் பேனர் விவகாரங்களில் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்