மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை
x
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தியமங்கலம் அருகே நீலகிரி - ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள  தெங்குமரஹாடா வன கிராமத்தில், மாயாற்றில் பரிசல் இயக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்