மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் இயக்க தடை
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானி மற்றும் மாயற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தியமங்கலம் அருகே நீலகிரி - ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில், மாயாற்றில் பரிசல் இயக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Next Story