சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி & கண்காட்சி - அமைச்சர் நிலோபர் கபில் நேரில் பார்வை

சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி மற்றும் கண்காட்சி ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது . இதை ரஷ்ய பிரதமர் மெமிட்ரி மெட்வதேவ் தொடங்கி வைத்தார்.
சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி & கண்காட்சி - அமைச்சர் நிலோபர் கபில் நேரில் பார்வை
x
சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி மற்றும் கண்காட்சி  ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வருகிறது . இதை ரஷ்ய பிரதமர் மெமிட்ரி மெட்வதேவ் தொடங்கி வைத்தார். 60 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 300 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 48 பேர் கொண்ட குழு கலந்து கொண்டுள்ளது. தமிழகத்தின் சார்பில் கணேசன், விஸ்வநாதன், தஷ்லீம் முகைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி மற்றும் கண்காட்சியை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் தமிழக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் 3 பேரும் சர்வதேச திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்