முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - அமைச்சர் உதயகுமார் , தேனி எம்.பி. பங்கேற்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும்
முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் , தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டு, 605 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பேசிய ரவீந்தரநாத் குமார் , தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறினார். கிராமங்களில் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாகவும் அவர் தெரிவித்தார்
Next Story