ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு

ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கு - சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவு
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு வழங்க கோரிய வழக்கில் தமிழக சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாய் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், தமது மகன் கடந்த 27 ஆண்டில் இதுவரை 4 நாட்கள் மட்டுமே விடுப்பில் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தமது மகன் ரவிசந்திரனுக்கு கு ஒரு மாதம் விடுப்பு வழங்க வேண்டும் என்று தாய் ராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு, சிறைத்துறை கூடுதல் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Next Story

மேலும் செய்திகள்