சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
x
மக்களின் குறைகளை நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று நிவர்த்தி செய்யும் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டம் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், எடப்பாடி தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கப்பட்டு வரும் பணிகளை பட்டியலிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்